பதிவு செய்த நாள்
20
அக்
2016
04:10
திருவண்ணாமலை: சோமாசிபாடி கிராமம், பெரியநாயகி உடனுறை சோமநாதீஸ்வரர் நூதன கோயிலில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா (26.10.2016) புதன்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
21.10.2016 : மாலை: 5 மணிக்கு மேல் ஸகல தேவதா அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜை, உச்சிஸ்ட்ட மஹா கணபதி ஹோமம், தீபாராதனை, பிரசாதம்
22.10.2016: காலை: 10.30 மணிக்கு மேல் நவகிரஹ ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல்.
23-10-2016 : காலை: 8.00 மணிக்கு மேல் புனித நீர் எடுத்து வருதல், ப்ரசன்னாபிஷேகம், அக்னி ஸங்கிரஹணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை: 4.00 மணிக்குமேல்- பிரவேசபலி, வாஸ்து சாந்தி, ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம் ஆச்சாரியார், ரட்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் (1- முதல்கால யாக பூஜைகள் ஆரம்பம்), இரவு 9.00 மணியளவில் மஹா பூர்ணாஹுதி-தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
24.10.2016: காலை: 9.00 மணிக்கு விசேஷ சந்தியுடன் யாக வேள்விகள் (2-இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பம்),நற்பகல் 12 மணிக்கு -பூர்ணஹூதி - தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல். மாலை 5 மணிக்குமேல் விசேஷ சந்தியுடன் (3-மூன்றாம் கால யாக பூஜைகள் ஆரம்பம்). இரவு 9.00 மணிக்கு பூர்ணாஹூதி -தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல்.
25.10.2016: காலை: 9.00 மணிக்கு - விசேஷ சந்தியுடன் (4- நான்காம் கால யாக பூஜைகள் ஆரம்பம்), நற்பகல் 12 மணிக்கு - பூர்ணாஹூ-தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல். மாலை: 5.00 மணிக்கு- விசேஷ சந்தியுடன் (5- ஐந்தாம் கால யாக பூஜைகள் ஆரம்பம்). மாலை: 6.00 மணிக்கு - குத்துவிளக்கு பூஜையும், அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்னையும், சுவாமிக்கு பஞ்சமுகார்ச்சனையும் அதனை தொடர்ந்து கோ பூஜை, பிரம்மசாரி பூஜை, சுஹாசினி பூஜை, கன்னியா பூஜையுடன், ராகம், தாளம், ஆசீர்வாதம், திருமுறைபாராயணம், தீபாராதனை அருட்பிரசாதம், மாலை 6.30 மணிக்குமேல் - சுவாசஸாலயா நாட்டியப்பள்ளி நடத்தும் ஓம்காரம் என்னும் நடனநிகழ்ச்சி நடைபெறும்.
26.10.2016 : காலை: 7.00 மணிக்கு- பாலசுப்பிரமணிய கோயிலிருந்து சீர்வரிசை எடுத்து வருதல். காலை: 8.00 மணிக்கு- நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, ஸ்பர்ஷாஹூதி ஹோமங்கள், மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கிரஹப்ரிதி, கடங்கள் புறப்பாடு. காலை: 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் - அனைத்து விமானங்களுக்கும் கும்பாபிஷகம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் அதிவிமர்சியாக நடைபெறும். காலை: 11.00 மணிக்கு - அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். காலை: 11.30 மணிக்கு - கோயில் முன் மண்டபத்தில் திருக்கல்யாணம் அதிவிமர்சியாக நடைபெறும். இரவு: 7.00 மணிக்கு நாதஸ்வர கச்சேரியுடன் சுவாமி திருவீதி உலாவும் அவ்வமையம் வாணவேடிக்கையும் நடைபெறும்.
தொடர்புக்கு: 99527 83232, 99449 03839, 99409 62452, 94446 58728, 88835 70700, 94429 78981.