பதிவு செய்த நாள்
21
அக்
2016
11:10
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் மற்றும் கே .ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று பாலபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, 108 லிட்டர் பாலபிஷேகம் நடந்தது. தொ டர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும்; மாலை, 6:00 மணிக்கு, சேஜ் ஆரத்தியும் நடந்தது. இதில், திருத்தணி, கே .ஜி.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.