பதிவு செய்த நாள்
21
அக்
2016
11:10
ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும்மேற்பட்ட கோயில்களில் முளைப்பாரி, பொங்கல் விழா நிறைவடைந்தது. கிராமங்களில் விவசாயம் தழைக்க மழை பொழியவும், சமூக நல்லிணக்கம் மலரவும் குல தெய்வமான அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் முளைப்பாரி விழா நடத்துவது வழக்கம். தமிழகத்தில் பிற மாவட்டங்களை விட ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் ஏராளமான கோயில்களில் முளைப்பாரி விழா நடக்கிறது. இந்த ஆண்டு ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், கீழக்கரை, சாயல்குடி, கமுதி, சாயல்குடி, முதுகுளத்துார், அபிராமம், திருவாடானை, தொண்டி உள்பட மாவட்டத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களில் முத்து பரப்புதலுடன் துவங்கி குளுமை பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது.