பதிவு செய்த நாள்
21
அக்
2016
12:10
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை பாதுகாக்க தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கில், ஆவணங்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் (நீதித்துறை),மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ளது. இதில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, தெப்பக்குளத்தை பாதுகாக்க மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், கோயில் நிர்வாக அலுவலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என 2011 ல் மனு தாக்கல் செய்திருந்தார். இதனடிப்படையில் நீதிபதிகள் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு ஏற்றனர். எதிர்மனுதாரரான டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பக்குளம் அனைத்து சிறு வியாபாரிகள் நலச் சங்கத்தினர்,ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளோம். கடைகளுக்கான குத்தகைக் காலம் முடிந்துவிட்டதால், கடைகளை காலி செய்து, ஏன் எங்களிடம் ஒப்படைக்கக்கூடாது? என விளக்கம் கோரி கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து அறநிலையத்துறை இணை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்துள்ளோம். அது நிலுவையில் உள்ளது, என மனு செய்தனர்.நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அக்.,24 க்கு ஒத்திவைத்தது.