Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கருவறையில் குளிர்சாதன வசதி! திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமி அதிஷ்டான கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
சீர்காழி ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமி அதிஷ்டான கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

21 அக்
2016
01:10

மயிலாடுதுறை :  சீர்காழி ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமி அதிஷ்டான மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானத்தின் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. நேபாள நாட்டின் மன்னர் பரம்பரையில் பிறந்த  கதிர்காம சுவாமிகள் இலங்கையில் ஆன்மீக தொண்டாற்றி, பின்னர் சீர்காழிக்கு வந்தார். இங்குள்ள உப்பனாற்றாங்கரையில் குடில் அமைத்து தங்கிய கதிர்காம சுவாமிகள் ஆன்மீக பணியுடன், மூலிகைப் பன்னை அமைத்து தீராத நோய்களுக்கும் மருந்து கொடுத்து மக்களை காத்துவந்தார். சீர்காழி, தென்பாதியில் ஸ்ரீ பால தண்டாயுத பானி கோயிலை அமைத்து சுவாமிகள் வழிபட்டு வந்தார். இந்நிலையில் கதிர்காம சுவாமிகள் உப்பனாற்றாங்கரையில் அவர் வாழ்ந்த இடத்திலேயே ஜீவசமாதி அடைந்தார். அந்த இடத்தில் பொது மக்கள் அதிஷ்டானம் அமைத்து ஸ்ரீ காதிர்காம சுவாமிகளை வழிபட்டு வருகின்றனர்.

அதிஷ்டானத்தின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று யாகசாலை அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. இன்று காலை 2ம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோபுரகலசத்தை அடைந்தது. ஞானகணேச குருக்கள் தலை மையிலானோர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். தொடர்ந்து அதிஷ்டானத்தில் உள்ள சிவ லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆசிரியர்; கோவி நடராஜன் கதிர்காம சுவாமிகளின் சிறப்புகளை பக்தர்களுக்கு எடுத்துரைத்தார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கதிர்காம சுவாமிகள் டிரெஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar