பதிவு செய்த நாள்
22
அக்
2016
12:10
பல்லடம்: பல்லடம், மந்திரிபாளையத்தில் உள்ள வாவிபாளையம் ஸ்ரீ லலிதாம்பிகை நகரில், ஸ்ரீவித்ய ஸ்ரீ லலிதாம்பிகை ஆதி பராசக்தி பீடம் செயல்படுகிறது.
ஸ்ரீவித்ய ஸ்ரீ லலிதாம்பிகை கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், ஸ்ரீலலிதா சுவாமிகள், அதன் பீடாதிபதியாக உள்ளார். ஸ்ரீ லலிதாம்பிகை நகரில் உள்ள சிவசக்தி கோவிலுக்கு, ஸ்ரீ வித்ய ஸ்ரீ லலிதா மகாதிரிபுர சுந்தரி அம்மன் மற்றும் பரிகார தேவதைகளின் சிலைகள், ஸ்ரீ லலிதா சுவாமி பீடாதிபதி சொந்த செலவில், கர்நாடக மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டன. கடந்த வாரம் வந்த, ஸ்ரீ லலிதாம்பிகை, கணபதி, முருகன், முனீஸ்வரன் ஸ்வாமி சிலைகள், கேத்தனூரில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. வரும், 30ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஸ்ரீ லட்சுமி பிரத்யங்கரா ஹோமம், ஸ்ரீ லலிதா சுவாமி பீடாதிபதி முன்னிலையில், நடைபெற உள்ளது. பல்லடம் மற்றும் திருப்பூரை சேர்ந்த பக்தர்களும் பங்கேற்று பயனடைய வேண்டும் என, ஸ்ரீ லலிதா ஸ்வாமி பீடாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.