பதிவு செய்த நாள்
22
அக்
2016
12:10
குமாரபாளையம்: சேலத்தில், கும்பாபிஷேகம் நடக்கவுள்ள குபேரலிங்கம், குமாரபாளையம் வருகை தந்ததால், பக்தர்கள் வழிநெடுக வழிபட்டனர்.
சேலம் மாவட்டம், இரும்பாலை முதல் கேட் அருகில் உள்ள ஓம் சக்தி நகரில், ஹரியும், சிவனும் ஒரே இடத்தில் எழுந்தருள இருக்கும், ஜெய் ஆஞ்சநேயர் சுவாமி, குபேரலிங்கம் சுவாமி, வெங்கடேச பெருமாள் சுவாமி நூதன ஆலய அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா, நவ., 13ல் நடக்கிறது. குபேரலிங்கம் சுவாமி சிலை, நந்தி பகவான் சிலை ஆகியவை, அவினாசி அருகே உள்ள பூண்டி என்ற பகுதியில், பூஜைகள் செய்யப்பட்டு லாரி மூலம் கொண்டு வரப்படுகின்றன. சுவாமி சிலைகள், குமாரபாளையம், இடைப்பாடி, தாரமங்கலம் வழியாக சேலம் இரும்பாலைக்கு செல்ல உள்ளது. குமாரபாளையம் வழியாக சென்றபோது,கோவில் நிர்வாகிகள், பக்தர்களிடம் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கினர். பெரிய அளவிலான சிவலிங்கம் மற்றும் நந்தி பகவானை கண்டதும் பொதுமக்கள் பணிந்து வணங்கினர்.