ரோப்கார் நிறுத்தம் எதிரொலி: பழநியில் பிசியான வின்ச்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2016 11:10
பழநி: விடுமுறையை முன்னிட்டு பழநியில் குவிந்த பக்தர்கள் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், வின்ச் ஸ்டேஷனில் ஒரு மணிநேரம் காத்திருந்து மலைக்கு சென்றனர். பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுதபாணிசுவாமியை தரிசனம் செய்ய விடுமுறைநாட்களில் வெளிமாநில, மாவட்ட பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இவர்களில் முதியோர், குழந்தைகளுடன் வரும் பெண்கள் என பெரும்பாலோர் 3 நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு எளிதாக செல்லும் ரோப்காரில் விரும்பி செல்வர். அது அக்.,5 முதல் ஆண்டுபராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மூன்று வின்ச்கள் காலை 5 மணி முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப் படுகிறது. நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு வந்திருந்த பக்தர்கள் வின்ச் ஸ்டேஷனில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து மலைக் கோயிலுக்கு சென்று, மூலவர் ஞான தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.