திருமங்கலம்: திருமங்கலம் அருகே திரளி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் சிறப்பு யாக பூஜை நடந்தது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம், திருமங்கலம் ஒன்றிய தலைவர் தமிழழகன், நகர செயலாளர் விஜயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.