பதிவு செய்த நாள்
24
அக்
2016
12:10
விழுப்புரம்: முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டிய கோலியனுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் புத்துவாயம் மன் கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முதல்வர் ஜெ., உடல் நலம் பெற வேண்டி, கோலியனுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் புத்துவாயம்மன் கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, நல்லரசன்பேட்டையில் இருந்து கோலியனுார் புத்துவாயம்மன் கோவிலுக்கு பால்குடத்துடன் பெண்கள் ஊர்வலமாக வந்ததை, அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, அம்மனுக்கு பால்குட அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அமைச்சர் சண்முகம், எம்.பி., லட்சுமணன் ஆகியோர் அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தனர். விழுப்புரம் எம்.பி., ராஜேந்திரன், சேர்மன் விஜயா சுரேஷ்பாபு, மாவட்ட கவுன்சிலர் கஸ்துாரி ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய அணி செயலாளர் பெருமாள், கலியமூர்த்தி, வளவனுார் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் நாராயணன், பேரூராட்சி செயலாளர் சங்கரலிங்கம், பொருளாளர் அன்பழகன், நகர செயலாளர் காசிநாதன், மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் விழுப்புரம் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், கிளை செயலாளர்கள் உதயசூரியன், ராமசாமி, சிவக்குமார், வார்டு செயலாளர் சங்கர், பாசறை செயலாளர் சீனு, மகளிரணி செயலாளர் சுமதி, அவை தலைவர் மனோகரன், இளைஞரணி செயலாளர் சேட்டு(எ)பார்த்தசாரதி, இணை செயலாளர் கவிதா செந்தில்குமார், துணை செயலாளர் பவானி தமிழ்மணி, மாவட்ட பிரதிநிதி வித்யாபாலு, துணை செயலாளர் சீத்தா கலியபெருமாள், பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சஞ்சய்காந்தி, எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் மலையன், ஊராட்சி தலைவர் அய்யனார், ஊராட்சி செயலாளர் சிவபூஷ்ணம், நகர இலக்கிய அணி செயலாளர் திருப்பதி பாலாஜி, நிர்வாகிகள் பாண்டுரங்கன், செந்தில், ரவி, ரஜினி, சுந்தரமூர்த்தி, அரிதாஸ், கணேசன், சவுந்தர், மணி, சத்தியமூர்த்தி, விஜி, முரளி, மோகன், ராஜ்குமார், சேட்டு, பழனி, மருத்துவரணி கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோலியனுார் ஒன்றிய செயலாளர் முருகன் செய்திருந்தார்.