செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2016 06:10
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில், தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில், ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா அக்.,16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் காலை 7 மணிக்கு ரதரோகணம் நடந்தது. காலை 9.15 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரத வீதிகள் வழியாக வலம் வந்தது நிலைக்கு வந்தது. 10 ம் நாளான அக்.,25ல் காலை அம்மன் பல்லக்கில் திருவீதி உலாவும், இரவு 7.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.