சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையில்
பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக இணையதள முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
சபரிமலையில்வரும்
15ம் தேதி தொடங்கவுள்ள மண்டலபூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களின்
வசதிக்காக, வரும் 16ம் தேதி முதல் இணையதள முன்பதிவு தொடங்குகிறது. இதற்கான http:www.sabarimalaq.com என்ற இணையதள முகவரியில்
பக்தர்கள் விண்ணப்பி க்கலாம். இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்களுடைய
பெயர், முகவரியோடு புகைப்படத்தையும் பதிவுசெய்யவேண்டும். இந்த இணையதள
முன்பதிவு வசதி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி வரை அமலில் இருக்கும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.