பதிவு செய்த நாள்
25
அக்
2016
12:10
திருமழிசை: திருமழிசை ஜெகன்நாத பெருமாள் கோவில் குளம், போதிய பராமரிப்பில்லாததால்,‘குடி’ மை யமாக மாறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இந்து அறநிலையதுறையின் கட்டுப்பாட்டின் உள்ள ஜெகன்நாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளம், போதிய பராமரிப்பு இல்லாததால், சுற்றுச்சுவர் சிதலமடைந்தும், குளத்திற்கு இறங்கும் படிகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதை சீரமைக்க இந்து அறநிலையதுறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், இரவு நேரங்களில், குடிமகன்கள் குளத்தைச்சுற்றி அமர்ந்து, மது அருந்தி வருகின்றனர். மேலும், ‘குடி’ மகன்கள் மது அருந்து விட்டு, பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் டம்ளர்களை குளத்தில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால், குளத்து நீர் மாசடைந்து வருகிறது. தற்போது, ‘குடி’ மகன்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்,இதை தடுக்க போலீசார் தினமும் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.