பழநி;பழநி மலைக்கோயில் உண்டியலில் 22 நாட்களில் ரூ. ஒரு கோடியே 37 லட்சத்து 38 ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. தங்கம் 820 கிராம், வெள்ளி 4,100 கிராம், வெளிநாட்டு கரன்சி-358ம், ரொக்கம் ரூ. ஒரு கோடியே 37 லட்சத்து 38 ஆயிரத்து 935 கிடைத்துள்ளது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, உதவி ஆணையர் சிவலிங்கம், வங்கிப் பணியாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.