வறண்ட தெப்பக்குளம் கிளீன்:இணைந்த கரங்களால் விமோசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2016 11:10
மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் குவிந்திருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் கல்லுாரி மாணவர்களுடன் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர். மதுரை இயற்கை பாதுகாப்பு நிறுவனம் தலைவர் செல்வம் ராமசாமி தலைமை வகித்தார். சமயநல்லுார் இளைய தலைமுறை அமைப்பின் நிர்வாகி சுருளிமுத்து முன்னிலை வகித்தார். தியாகராஜர் கல்லுாரி மாணவர்கள், மதுரை காமராஜ் கல்லுாரி தொடர்பியல் துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தெப்பக்குளத்தில் கிடந்த குப்பைகளை முழுமையாக அகற்றினர். தொடர்பியல் துறை தலைவர் நாகரத்தினம் ஒருங்கிணைப்பு செய்தார். தெப்பக்குளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் கொட்டக்கூடாது, திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது, சுகாதாரமான பகுதியாக பயன்படுத்த வேண்டும், நீர் நிரப்பி எப்போதும் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.