பதிவு செய்த நாள்
26
அக்
2016
12:10
ஆட்டையாம்பட்டி: சேலம் இரும்பாலை அருகே, புதிதாக கட்டப்பட்டுள்ள கோவிலில், பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குபேரலிங்கம் மற்றும் மகாநந்தி கற்சிலைகள், கோவையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சேலம், இரும்பாலை முதல்கேட் அருகே, ஓம்சக்தி நகரில் ஒரே இடத்தில், 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களின் மத்தியில், குபேரலிங்கம் மற்றும் வெங்கடேச பெருமாள் கற்சிலைகள் நவ. 13ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபி ?ஷகம் செய்யப்படவுள்ளது. இதற்காக, கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிற்ப கலைக்கூடத்தில், நான்கு லட்சம் மதிப்பில் தயார் செய்யப்பட்ட கற்சிலைகள், லாரியில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சில நாட்களுக்கு முன், பெருமாள் சிலை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்த பின் நேற்று முன்தினம் ஏழே முக்கால் அடி உயர குபேரலிங்கம் மற்றும் ஐந்தடி உயர மகாநந்தி சிலைகளை பெரிய டாரஸ் லாரியில் ஏற்றி, கோவையில் இருந்து புறப்பட்டது. நேற்று மதியம் ஆட்டையாம்பட்டி வந்த சிலைகளை, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வணங்கினர். இன்று மாலை மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காகாபாளையம், இளம்பிள்ளை வழியாக இரும்பாலைக்கு அருகே கட்டப்பட்டுள்ள கோவிலை வந்தடையும்.