காசிவிஸ்வநாதர் கோயிலில் அக்.31 ல் கந்தசஷ்டி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2016 12:10
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழா அக்.31ல் துவங்குகிறது. நவ.5 ல் சூரசம்ஹாரம், 6 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. இங்கு தனிசன்னதியில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமிக்கு ஒருவாரம் நடைபெறும் விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, சஷ்டிப்பாராயணம், நடனம், பக்தி இன்னிசை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு பூஜைகளும் நடைபெறும். விழா நாட்களில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவர். பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்விழா வரும் அக்.31ல் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மதுரை ராமகிருஷ்ணமடம் இளைய மடாதிபதி குருவரானந்தர் அருளாசி வழங்கி கலைவிழாவை துவக்கி வைக்கிறார். சஷ்டி விழா அமைப்பாளர் கதிரேசன், நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.