பதிவு செய்த நாள்
26
அக்
2016
05:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஞானபீடம் அமர்ந்த 46ம் ஆண்டு நாள் விழா கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் ஞானபீடம் அமர்ந்து 46ம் ஆண்டு தொடக்க விழா ஆதீனத்தில் நடந்தது. அதனை முன்னிட்டு ஞானபுரீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமம், மிருத்துஞ்ஜய ஹோமம், ஆ யுஷ்ஹோமம் நடைபெற்றது. தருமை ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் மதியம் ஞானபுரீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு ஹோமங்கள் பூர்ணாஹூதியாகி ஞா னபுரீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மிருத்துஞ்ஜய ஹோமம் பூர்ணாஹூதியாகி கடங்கள் புறப்பட்டு குருமகா சன்னிதானத்திற்கு மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து குருமகா சன்னிதானம் விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். பின்னர் ஆதீனத்தில் உள்ள ஞானபீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தருமை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து அருட்பிரசாதங்கள் குருமகா சன்னிதானத்திற்கு வழங்கப்பட்டது. இதில் தி ருவையாறு குமாரசுவாமி தம்பிரான்சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான்சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள்,ஆதீனம் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு,ஆதீனம் கல்வி நிறுவன முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.