பதிவு செய்த நாள்
27
அக்
2016
11:10
ராசிபுரம்: ராசிபுரம், நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் திருக்கோவில் ஐப்பசி திருத்தேர் பெருவிழா நடந்து வருகிறது. ராசிபுரம், செல்லாண்டியம்மன், நித்யசுமங்கலி மாரியம்மன், ஆஞ்சநேயர் திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடக்கிறது. இந்தாண்டு திருவிழா, கடந்த, 18 இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 20 இரவு, 12:00 மணிக்கு கம்பம் நடும் விழா நடந்தது. பூப்போட்ட நாளில் இருந்து, நாள்தோறும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள், தங்களது அறக்கட்டளை மூலமாகவே, தனிப்பட்ட முறையிலோ, மாரியம்மனை பூக்களால் அலங்கரித்து, திருவீதி உலாவாக மேள, தாளத்துடன் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். வரும், நவ., 5 வரை திருவிழா கொண்டாடப்படவுள்ளது.