பதிவு செய்த நாள்
27
அக்
2016
11:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில்கள், ஏர்வாடி தர்கா ஆகிய இடங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்திருந்தார். அதன்படி நேற்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் ராமேஸ்வரம் திருக்கோயிலில் பக்தர்கள் தரிசிக்கும், நடமாடும் பகுதிகளான கோயில் மூன்றாம் பிரகாரம், சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை, சன்னதி தெரு, கோயில் நான்கு ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் 78 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்தது. இக்கேமராக்கள் பதிவுகளை, கோயில் கிழக்கு நுழைவு வாசலில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்தவாறு போலீசார் கண்காணிக்க உள்ளனர்.