பதிவு செய்த நாள்
27
அக்
2016
11:10
செஞ்சி: தமிழக முதல்வர் ஜெ., பூரண நலம் பெற வேண்டி, இல்லோடு ஏலவாழ் குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கஜபூஜை நடந்தது. வல்லம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், இல்லோடு ஏலவாழ் குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், கஜபூஜை, மிருத்யுஞ்ய ஹோமம், ஆயுஸ் ஹோமம், கோ பூஜை, அஸ்வ பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலையில் மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். முன்னதாக சிறப்பு ஹோமமும், மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து யானை, குதிரை, பசுவிற்கு சிறப்பு பூஜையும் நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.பி., டாக்டர் லட்சுமணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வினாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் சேர்மன்கள் அண்ணாதுரை, ரங்கநாதன், கஸ்துாரி வினாயகமூர்த்தி, மாணவரணி மாவட்ட செயலாளர் ராமசரவணன், மாவட்ட நிர்வாகிகள் செந்தில், சரவணக்குமார், பாலகிருஷ்ணன், சுகுமார், முன் னாள் துணை சேர்மன் பரிமளா பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் மனோகரன், துணை செயலாளர் ரமேஷ், இளைஞர் பாசறை பாலமுருகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் அசோக்குமார், வாசுதேவபூபதி, ஏழுமலை, குமார், பிரகாசம், முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, வெங்கடாஜலம், குணசேகர், கிளை நிர்வாகிகள் ஆளவந்தார், கதிர்வேல், ராஜா, ராஜாராம், பாலு நடராஜன், மகளிர் அணி சத்யவாணி ஆறுமுகம், மூர்த்தியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.