மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆன்மிக பயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2016 04:11
அமைதியை விரும்பும் மகர ராசி அன்பர்களே!
சனி பகவானை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு, அவர் உங்கள் ராசிக்கு 11ம் இடமான விருச்சிக ராசியில் இருக்க இந்த மாதம் தொட ங்குகிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இருப்பது மற்றொரு சிறப்பான நிலை. அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த பி ன்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. மேலும் சூரியன் மாதம் முழுவதும் நன்மை தருவார். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிடைக்கும். புதன் நவ.25- வரையும், சுக்கிரன் டிச. 4-க்கு பிறகும் சாதகமாக நின்று நற்பலனைத் தருவார்கள். மற்ற கிரகங்கள் சுமாரான நிலையில் இருந்தாலும் பாதிப்பு ஏதும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், -மனைவி இடையே அன்பு தொடரும். பண வரவு இருக்கும். சொந்த பந்தங்கள் வருகை இருக்கும் டிச.4,5ல் பெண்களால் முன்னேற்றம் காணலாம். நவ.29,30-ல் உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். ஆனால் டிச.10,11ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். ஒதுங்கி இருக்கவும். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். டிச.4க்கு பிறகு சகோதரிகளால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த செயல் வெற்றி அடையும். நவ.25-க்கு பிறகு போட்டியாளர்களின் இடையூறுகளை சந்திக்க வேண்டி இருக்கும். உங்கள் முயற்சிகளில் பின்னடைவைச் சந்திக்கும் நிலை உருவாகலாம். நவ.17,18, டிச.14,15-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆனால் நவ. 29,30, டிச. 4,5-ல் விரயம் ஆகலாம் என்பதால் கல்லாப்பெட்டி உங்கள் கண்காணிப்பில் இருப்பது நல்லது. புதிய முதலீட்டு விஷயத்தில் அதிக கவனம் தேவை. டிச.6-க்கு பிறகு நிறுவனத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துவது நல்லது. அப்போது அரசு வகையிலும் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
பணியாளர்களுக்கு பொருள் சேரும். உயர்அதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறலாம். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். நவ.26,27,28-ல் நல்ல பலனை எதிர்நோக்கலாம். சிலர் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. மாத இறுதியில் சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர் டிச.4- வரை சுக்கிரன் சாதகமற்ற நிலையில் காணப்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்காது. உங்களுக்கு வர வேண்டிய பாராட்டு, புகழ் பிறரால் தடுக்கப்படலாம். டிச.4க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். புதிய ஒப் பந்தங்கள் எளிதாக கிடைக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு வந்து சேரும்.
அரசியல்வாதிகள் பணவரவில் முன்னேற்றம் காண்பர். தலைமையின் அன்பு கிடைக்கும்.
மாணவர்கள் மாத ஆரம்பத்தில் படிப்பில் சிறந்து விளங்குவர். நவ.25-க்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும்.
விவசாயிகள்- உழைப்புக்கு ஏற்ற வருமானம் பெறுவர். நெல், கோதுமை சோளம் மற்றும் பழ வகைகள் மூலம் லாபம் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருவாய் குறையலாம்.
பெண்கள் மகிழ்ச்சியாக காணப்படுவர். நவ. 19,20-ல் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரும். நகை, பணத்தை கவனமாகப் பாதுகாக்கவும். டிச.8,9-ல் புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நிலை நன்றாக இருக்கும்.
நல்ல நாள்: நவ.17,18,19,20,26,27,28,29, 30, டிச.4,5,8,9,14,15.
கவனநாள்: நவ.21,22,23- சந்திராஷ்டமம். இந்த நாட்களில் புதிய முயற்சி ஏதும் செய்ய வேண்டாம். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான ÷ பச்சுவார்த்தையை தள்ளிப் போடலாம். அனாவசியமாக எதிலும் தலையிடக்கூடாது.
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்: ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். டிச. 19- வரை வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாளை வணங்கி வரவும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »