விளாச்சேரியில் தயாராகும் ’மெகா சைஸ்’ அகல் விளக்குகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2016 11:11
திருநகர், ஸ்ரீவில்லிப்புத்துார் அருகேயுள்ள திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற, விளாச்சேரியில் ’மெகா சைஸ்’ அகல் விளக்குகள் தயாராகின்றன. விளாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகிதகூழ் மூலம் சீசனுக்கு ஏற்றாற்போல் பொம்மைகள் தயாரிக்கின்றனர்.இங்கு தயாரிக்கப்படும் சிலைகள், அகல் விளக்குகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனையாகிறது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தற்போது ஒரு இஞ்ச் முதல் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. ’தென் திருப்பதி’ என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள திருவண்ணாமலை வெங்கடாஜலபதி கோயிலில் கார்த்திகை தீபத்திற்காக, 2 அடி உயரம், 2 அடி அகலத்தில் 7 மெகா சைஸ் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சாம்பசிவம் கூறியதாவது: 22 ஆண்டுகளாக இந்த பெரிய அகல் விளக்குகள் தயாரித்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கிறோம். இப்பகுதியில் களிமண்ணால் தயாரிக்கப்படும் பெரிய விளக்குகள் இவை. இந்த விளக்கு 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும். இத்துடன் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்குகளும், 100 மில்லி கொள்ளளவு கொண்ட 2 ஆயிரம் விளக்குகளும் திருவண்ணாமலை தீபத்திற்காக தயாரிக்கப்படுகிறது, என்றார்.