பதிவு செய்த நாள்
02
டிச
2016
11:12
கோட்டயம்: கோட்டயம் அருகே குமாரநல்லுார் தேவி கோயில் ஆண்டு திருவிழா டிச.,4 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் நடக்கும் பத்து நாள், ஆண்டு திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சபரிமலை செல்லும் பக்தர்களும் இங்கு செல்வதுண்டு. டிச., 4 மாலை 4:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கிருஷ்ணன் நம்பூதிரி, அச்சுதன் நம்பூதிரி, மேல்சாந்தி விஷ்ணுபிரசாத் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு, தினமும் நடக்க உள்ள கலாசார மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான துவக்க விழா நடக்கிறது. இதில் பல்துறை பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். தினமும் காலையிலும், மாலையிலும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் மற்றும் பஜனை நடக்கின்றன. கேரளாவின் பாரம்பரிய கலைகளான கதகளி, ஓட்டன்துள்ளல், மோகினியாட்டம் ஆகியவையும் வெவ்வேறு நாட்களில் நடக்கிறது.டிச.,12 அதிகாலை 3:00 முதல் திருக்கார்த்திகை தரிசனம் துவங்குகிறது. காலை 6:00 மணிக்கு ஆராட்டுக்கு எழுந்தருளல் நடக்கும். பின்னர் 9:00 மணி முதல் கார்த்திகை பிரசாதமூட்டு என்ற அன்னதான திருவிழா நடக்கும். மாலை 5:30 மணிக்கு கார்த்திகை விளக்கு எழுந்தருளல் நடக்க உள்ளது. டிச.,13 ல் ஆராட்டு, கொடியிறக்கத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன. கோயில் பூஜை விபரங்கள் பற்றி அறிய 0481 231 2737ல் தொடர்பு கொள்ளலாம்.