வேங்கட சுப்பிரமணிய பாகவதர் ஊத்துக்காடு என்ற ஊரில் வாழ்ந்த கிருஷ்ண பக்தர். அவர் பாடும்போது தொடையைத் தட்டியோ அல்லது கைகளைத் தட்டியோ தாளம் போட மாட்டார். நீங்கள் ஏன் கைகளைத் தட்டி தாளம் போட்டுப் பாடுவதில்லை? என்று அன்பர் ஒருவர் பாகவதரிடம் வினவினார். அதற்கு பாகவதர், நான் பாடும்போது என் மடியில் கண்ணன் வந்து தூங்குகிறான். கைகளையோ, மடியையோ தட்டி நான் தாளம் போட்டுப் பாடினால் கண்ணனின் தூக்கமல்லவா கெட்டுவிடும்? என்று பக்தியுடன் பதில் கூறினார்.