பதிவு செய்த நாள்
03
டிச
2016
12:12
திருப்பூர்: திருப்பூர், வாலிபாளையம் சாய்பாபா கோவில், 4ம் ஆண்டு விழா நிகழ்ச்சி டிச.,2 துவங்கியது. டிச.,3 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடக்கிறது.
திருப்பூர், வாலிபாளையம் யுனிவர்சல் ரோட்டில், திருப்பூர் ஸ்ரீஷீரடி சாய் பீடத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சாய்பாபா கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேகம் நடந்து மூன்றாண்டு நிறைவடைந்து, 4ம் ஆண்டு துவக்க விழா சிறப்பு பூஜைகள் , நேற்று துவங்கின. ஆண்டு விழா பூஜையினை ஷீரடி மந்திர் தலைமை குருக்கள் பண்டிட் திகம்பர் பாலசாகீப் குல்கர்னி தலைமையில் குருக்கள் குழுவினர் நடத்தினர்.
முன்னதாக, கோவிலில், கணபதி பூஜை, கலச பூஜை, மாத்ருக பூஜை, நவகிரக பூஜை, ஐஸ்வர்ய கலச பூஜை ஆகியன நடந்தன. தொடர்ந்து சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. மாலை தூப ஆரத்தியும், ஜெண்டை மேளத்துடன், சாய்பாபா புஷ்ப பல்லக்கு ஊர்வலமும் நடந்தது. அதன்பின், பாண்டியன் நகர் சவுடேஸ்வரியம்மன் பஜனை குழுவின் சாய் பஜனை நடந்தது. பின், சிறப்பு ஆரத்தியுடன் முதல் நாள் விழா நிறைவடைந்தது. டிச.,3 இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக காலையில் சிறப்பு காகட் ஆரத்தி, 1008 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் வேள்வி பூஜைகள் நடக்கிறது. பிற்பகல் சிறப்பு அலங்காரம் மற்றும் ஆரத்தியும் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படுகிறது. மாலை சிறப்பு ஆரத்தியை தொடர்ந்து ஷீரடி மந்திர் தலைமை குருக்கள் ஆசியுரை, அதையடுத்து பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.