பதிவு செய்த நாள்
03
டிச
2016
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், சுவாமி திருவீதி உலாவில் பயன்படுத்தப்படும் திருக்குடைகள், மாட வீதியை வலம் வந்து, கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து தினமும் பத்து நாட்கள் காலை, இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
வீதி உலாவில், தினமும் வெவ்வேறு வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, வாகனத்தில் பயன்படுத்தப்படும் திருக்குடைகள், 14 மற்றும் 20 தொம்பை (வாகன அலங்காரத்தில் தொங்க விடப்படும் அலங்கார துணி) ஆகியவை சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கம் சார்பில் கொண்டு வரப்பட்டது. இரண்டு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் அவை செய்யப்பட்டு, டிச.,2 அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, திருக்குடைகள், மாட வீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.