பதிவு செய்த நாள்
07
டிச
2016
11:12
பழநி: பழநி மலைக்கோயிலில் கார்த்திகை திருவிழா நேற்று காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழா நவ.,12 வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. மாலை 6:35 மணிக்கு விநாயகர், மூலவர் ஞானதண்டாயுதசுவாமி, சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், மயிலுக்கு காப்புக் கட்டுதல் நடந்தது. விழாநாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. சின்னக் குமாரசுவாமி, தங்கச்சப்பரத்தில் திருவுலா வருதல் நடக்கிறது. டிச.,11ல் மாலை 6:00 மணிக்குமேல் பரணிதீபம் ஏற்றப்படும். டிச.,12ல் பெரிய கார்த்திகையை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். மதியம்2:00 மணிக்கு மேல் சண்முகார்ச்சனை மற்றும் தீபாராதனையும் மாலை 5:30 மணி, சாயரட்சை பூஜை முன்னதாக மாலை 4:00 மணிக்கு நடைபெறும் சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுதருளுகிறார். மலைக்கோயிலின் நான்கு பக்கங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு, மாலை 6:00 மணிக்குமேல் திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப் பனை ஏற்றப்படும். இதனால் அன்று இரவு 7:00 மணி தங்கரதப் புறப்பாடு கிடையாது. ஏற்பாடுகளை பழநிகோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.