Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனுமன் பற்றி விவேகானந்தர்! வளர்த்தவர்களை போற்றும் நாள்! வளர்த்தவர்களை போற்றும் நாள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வருந்தாதே மனமே! நீயும் வருந்தாதே மனமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2016
05:12

*துன்பம் கண்டு யாரும் வருந்தத் தேவையில்லை. துன்பத்திற்கு பின் நன்மை வரப் போவது உறுதி. இதை அறிந்து நடந்தால் சிரமமில்லாமல் வாழலாம்.  
*கடவுள் மகத்தானவர் என்பதால் தான் மனிதர்களின் புகழ் மொழிக்கும், ஏளனத்துக்கும் செவி சாய்க்காமல் எப்போதும் மவுனமாகவே இருக்கிறார்.
*ஆட்சி பீடத்தில் வீற்றிருக்கும் திறமையற்ற அரசனைக் காட்டிலும், திறமையும், நேர்மையும் மிக்க தொழிலாளியாக இருப்பது உயர்வானது.
*அறிவின் வடிவாகத் திகழும் கடவுள், பிரம்மாண்டமானவராக விளங்குகிறார். அவரது அருளால் தான் எல்லாமே நடக்கிறது.
*பகுத்தறிவுவாதி எதையும் பிரித்தறியவும், விபரங்களை வரையறுக்கவும் விரும்புகிறான். ஆனால் ஆன்மிகவாதி விஷயங்களை ஒன்றுபடுத்தி, மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுகிறான்.
*கடவுளின் அன்பில் மனம் நெகிழ்ந்து உருகுங்கள். அவரது திருவிளையாடலைக் கண்டு உணர்ந்தவர்கள் வேறு எதையும் பெரிதாகக் கருதமாட்டார்கள்.
*நீங்கள் செய்வது மட்டுமே நியாயம் என்று வாதாடாதீர்கள். மற்றவர்களின் கருத்தையும் மதியுங்கள். அவர்களது செயல்களிலுள்ள நியாயத்தை உணருங்கள்.
*அறிவியலின் கண்டுபிடிப்புகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், விஞ்ஞானிகள் மனித ஆன்மாவைக் கண்டறியும் கருவியையும் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்.
*கடவுள் மீதுமனிதன் கொண்டிருக்கும் மதிப்பீடு அர்த்தமற்றது. அவரது சக்தியைத்
தீர்மானிக்கும் சக்தி நமக்கு இல்லை. மேலும் மனித விதிகளுக்கு அடங்கி நடக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை.
*உங்கள் சிந்தனைகள் இமயத்தின் சிகரத்தை விட, உயர்ந்ததாக அமையட்டும். கடலையும் விட ஆழ்ந்து பார்க்கும் திறம் கொண்டதாகவும் விளங்கட்டும்.
*கடவுள் முன் மனிதன் அற்பப்புழு போன்றவன். தனது திறமை மீது நம்பிக்கை வைத்து மனிதன் அகந்தை கொள்வது முட்டாள்தனமானது.
*அன்பும், ஆற்றலும் இணைந்து விட்டால் உலகம் வளமாகி விடும். இவை இரண்டும் தனித்திருந்தால் எந்தச் செயலும் வெற்றி பெறாது.
*தீயவர்களிடமும் நல்ல குணம் இருக்கிறது. ஒழுக்கசீலர்களிடமும் கெட்ட குணம்
இருக்கிறது. இது உலக இயற்கை. இதில் வியப்படையவோ, திகைக்கவோ ஏதுமில்லை.
*அன்புடன்  நடந்து  கொள்ளுங்கள். எல்லார் மீதும் இரக்கப்படுங்கள். நல்ல உணர்வுகளை வெளிப்படுத்தி மகிழுங்கள். ஆனால் பாசம் என்ற பெயரில் யாருக்கும் அடிமையாகி விடாதீர்கள்.
*ஒருவன் பனையளவு பாவம் செய்திருந்தாலும்,  சிறு தினையளவு நன்மை செய்திருந்தால், அவனைக் கடவுள் தன் அடியவரில் ஒருவராக ஏற்றுக் கொள்வார்.
*ஆத்திகம் என்பது கடவுளின் ஒரு பக்கத்தையும், நாத்திகம் அவரது மறுபக்கத்தையும்
வெளிப்படுத்துகிறது. இரண்டுமே மனித அறிவை முழுமை அடையச் செய்யும்
விஷயங்கள் தான்.
*கடவுளின் கண்களில் அற்பமானது என்று எதுவுமில்லை. அதுபோல மனிதனின் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்கக் கூடாது. எல்லாமே உலகில் உயர்ந்தவை தான். (மகான் )அரவிந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar