பதிவு செய்த நாள்
08
டிச
2016
11:12
திருப்பதி : நாட்டின் பணக்கார கோவிலான திருப்பதி, முற்றிலும், டிஜிட்டல் எனப்படும், மின்னணுவியல் நடைமுறைகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள், அதிக அளவில் காணிக்கை செலுத்துவதால், நாட்டின் பணக்கார கோவிலாக திகழ்கிறது. இந்த கோவிலை நிர்வகித்து வரும், திருமலை திருப்பதி தேவஸ்தானம், டி.சி.எஸ்., எனப்படும், தகவல் தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், முற்றிலும் மின்னணுவியல் நடைமுறைகளுக்கு மாற முடிவு செய்துள்ளது.
ரொக்கமற்ற பரிவர்த்தனை: திருமலை - திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களிடம் கூறியதாவது: முறைக்கு, பெரியளவில் மாற, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இ - காணிக்கை, இ - உண்டி, இ - பதிப்பகங்கள், இ - செலான், இ - தரிசனம், இ - தங்குமிட வசதி, இ - சேவை உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. அனைத்து சேவைகளுக்கும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தங்குமிட ஒதுக்கீடு, லட்டு விற்பனை, காலண்டர், டைரி விற்பனையகங்களில், ஸ்வைப் இயந்திரங்கள் கண்டிப்பாக வைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு பற்றாக்குறை குறித்த புகார்கள் எழுந்ததால், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அதிகாரி கூறினார்.
23 கோடி ரூபாய்: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், ஒரு வாரத்தில், திருப்பதி கோவிலுக்கு, 5.13 லட்சம் பக்தர்கள் வந்ததாகவும், உண்டியல் வசூல், 23 கோடி ரூபாய் என்றும் தகவல்கள் கூறுகின்றன. - நமது நிருபர் -