மதுரை: மதுரை மீனாட்சி கோயிலில் டிச.,15 வரை கார்த்திகை மாத விழா நடக்கிறது. தினமும் பஞ்ச மூர்த்திகள் காலை, மாலை ஆடி வீதிகளில் புறப்பாடாகின்றனர். டிச., 12 மாலை கோயிலில் திருக்கார்த்திகை லட்ச தீபம் ஏற்ப்படும். அன்று இரவு 7:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி தேரடி மற்றும் பூக்கடை தெருவில் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.