மறைந்த தமிழக முதல்வர் மற்றும் சோவுக்கு மோட்ச தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2016 11:12
வாலாஜாபேட்டை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் துக்ளக் ஆசிரியர் சோ ஆகியோருக்கு, மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் துக்ளக் ஆசிரியர் சோ ஆகியோர் மறைந்ததையொட்டி, அவர்கள் ஆத்மா சாந்தியடைய, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், நேற்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பின் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.