திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வார் கோவிலில் கார்த்திகை தீப விழா தேரோட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வார் கோவிலில் கார்த்திகை தீப விழா, ஏழாம் நாளில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி மாட வீதி உலா வந்தனர். அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் பெரிய தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.விழாவில் பக்தர்கள் குழந்தையை கரும்பு தொட்டிலில் போட்டு மாட வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டனர்.