பதிவு செய்த நாள்
10
டிச
2016
12:12
வேலூர்: வேலூர் அடுத்த, ஸ்ரீபுரம் தங்கக் கோவில் வளாகத்தில் உள்ள, ஸ்ரீபுரம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இங்கு, ஸ்ரீநிவாச பெருமாள், 108 அடி உயரமும், 45 அடி அகலத்தில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 5 முதல் ஸ்ரீநிவாசர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்னர் பால், எண்ணெய், தான்ய வாசம், புஷ்ப வாசம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், 108 யாக சாலை அமைத்து, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட, புனித நீர் கலசங்களில் வைத்து யாக பூஜைகள் நடந்தன. டிச.,9 காலை, 9:00 மணியில் இருந்து, 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. சக்தி அம்மா, கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.