வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், ஒரு கோடி தன லட்சுமி யாகபூஜை நடந்தது. முரளிதர சாமிகள் தலைமையில், வேத விற்பன்னர்கள் தன லட்சுமி யாகத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதன் நிறைவு விழா டிச.,9 நடந்தது. இதையொட்டி, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.