Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் கட்டுக்கடங்கா கூட்டம்: ... சபரிமலையில்  தங்க அங்கி அணிவித்து அய்யப்பனுக்கு தீபாராதனை சபரிமலையில் தங்க அங்கி அணிவித்து ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
ஹரிவராசனம் பாடலில் பிழையா? தந்திரி ராஜீவரரு விளக்கம்
எழுத்தின் அளவு:
ஹரிவராசனம் பாடலில் பிழையா? தந்திரி ராஜீவரரு விளக்கம்

பதிவு செய்த நாள்

23 டிச
2016
12:12

சபரிமலை: ஹரிவராசனம் பாடலில் உள்ள பிழையை  கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாஸ் திருத்தி பாடினால், அதை சன்னிதானத்தில் பாட செய்வோம், என சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு தெரிவித்தார். சபரிமலையில் இரவு நடை அடைக்கும் போது ஐயப்பனின் தாலாட்டு பாடலாக ஹரிவராசனம் பாடல் பாடப்படுகிறது. இந்த பாடலை  கர்நாடக இசை கலைஞரும், பின்னணி பாடகருமான ஜேசுதாஸ் பாடியுள்ளார்.  இந்நிலையில் தான் பாடிய இந்த பாடலில் ஒரு பிழை உள்ளதாக ஜேசுதாஸ் அண்மையில் ஒப்புக்கொண்டார். இதுபற்றி அப்போது அவர் கூறியதாவது: பாடலின் மூன்றாவது வரியில் அருவி மர்த்தனம் நித்ய நர்த்தனம் என்று உள்ளது. பாடலின் ஆசிரியர் தேவராஜன்  சொல்லி தந்த படி பாடியதாகதான் எனக்கு நினைவு இருக்கிறது. ஆனால் இதை அரி (சத்ரு)- விமர்தனம் (நிக்ரகம்) என்று பிரித்து பாட வேண்டும். எனக்கு ஹரிவராசனம் பாட மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் இதை திருத்தி பாடுவேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜேசுதாஸ் சபரிமலை வந்த போது ஸ்ரீகோயில் முன்புறம் நின்று  ஹரிவராசனம் பாடலை பாடினார். அப்போது அவர் அந்த தவறை திருத்தி பாடினார். இதுபற்றி தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியதாவது: ஹரிவராசனம் பாடலை ஜேசுதாஸ் திருத்தி பாடினால், அதை தான் சன்னிதானத்தில் பாடச் செய்வோம். சபரிமலையில் பெண் களுக்கு அனுமதி ஒட்டு மொத்தமாக மறுக்க வில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மட்டுமே தடை உள்ளது. இது தொடர்பான வழக்கு தொடுத்துள்ள சமூக சேவகி திருப்தி தேசாய் சபரிமலை வருவது அவரது தனிப்பட்ட விஷயம், என்றார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar