சபரிமலை நடை அடைப்பு : டிச.30 மாலை மீண்டும் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2016 10:12
சபரிமலை: மண்டல கால பூஜைகள் முடிந்து, சபரி மலை நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச., 30- மாலை திறக்கிறது.
கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய சபரி மலை மண்டல காலம் நேற்று இரவுடன் நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் மாலையில் தங்க அங்கி அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடந்தது. இதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நெரிசல் ஏற்பட்டு 31 பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் பக்தர்களை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் இரவு மூன்று மணிக்கு நடை திறந்த போதும் பக்தர்களின் வரிசை சரங்குத்தியை கடந்து காணப்பட்டது. நேற்று காலை ஒன்பது மணிக்கு பின்னர் பம்பைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.நேற்று காலை 10:00 மணிக்கு நெய்யபிேஷகம் நிறுத்தப்பட்டு மண்டல பூஜைக்கான பணிகள் தொடங்கியது.தந்திரி கண்டரரு ராஜீவரரு கலசத்தில் களபம் நிறைத்தார். தொடர்ந்து மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி அதை எடுத்து வர கலச பவனி நடந்தது . கோயிலுக்குள் கலசம் சென்றதும், தந்திரி களபத்தை ஐயப்பனுக்கு களப அபிேஷகம் செய்தார். தொடர்ந்து மதியம் 12:15 மணிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதன் பின் மாலை 5:00 மணிக்கு நடை திறந்தது. தீபாராதனை, புஷ்பாபிேஷகம், அத்தாழபூஜைகளுக்கு பின் இரவு10:00 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் திருநீறு பூசி யோக நிலை ஏற்படுத்தி நடை அடைக்கப்பட்டது.இனி மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச.30-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும். 31-ம் அதிகாலை 3.30 மணி முதல் நெய்யபிேஷகம் நடைபெறும்.