திருப்பதி: திருமலை திருப்பதி சீனிவாசப் பெருமாளை இன்று(ஜன.3) காலை பிரதமர் மோடி தரிசித்தார்.இதற்காக காலை திருமலை வந்த பிரதமரை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்றனர். பிரதமருடன் முதல்வர் சந்திரபாபுநாயுடு,கவர்னர் நரசிம்மன் ஆகியோரும் இருந்தனர்.
கோவிலுனுள் தரிசனம் முடித்த திரும்பிய பிரதமருக்கு ரங்கநாயக மண்டபகத்தில் வைத்து கோவில் பட்டாச்சார்யார்கள் ஆசீர்வாதம் வழங்கினர்.பின்னர் அவருக்கு மகாபிரசாதமான லட்டு வழங்கப்பட்டது.