தஞ்சாவூர் அருகேயுள்ள காவலூரில் கோயில் கொண்டு அருளும் சுப்பிரமணிய சுவாமி பன்னிரண்டு கரங்களுடன் வள்ளி தெய்வானை சமேதராக அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். 12 ராசிகளும் 12 படிகளாக அமைந்த தலம். மூலவர் விமானம் அறுகோணம் கொண்டது. இத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை தரிசித்தால் ஒரு மகாமகம் கண்ட புண்ணியம் கிட்டும். 12 ராசிகளுக்கும் 12 தேங்காய்களை அர்ச்சனை செய்து மூன்று மாலைகளை, காசி, விசாலாட்சி, காசி விஸ்வநாதர், முருகப்பெருமானுக்கு சாத்தினால் திருமணத்தடை நீங்கும். புத்திரப் பாக்கியம் கிட்டும் என்று சொல்கிறார்கள்.