பதிவு செய்த நாள்
11
ஜன
2017
03:01
பொறுமையின் சின்னமாக விளங்கும் கடக ராசி அன்பர்களே!
விடாமுயற்சியுடன் அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டிய மாதமாக இது அமையும். உங்கள் திறமைக்கு சவால் விடும் காலம் இது. சுக்கிரனைத் தவிர மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் உள்ளன. இதனால் எந்த ஒரு செயலையும் அதிக முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியது இருக்கும். இருப்பினும் மாத முற்பகுதியில் அதிக பலன்களை காணலாம். அதற்கு காரணம் புதன் ஜன.30 வரை வக்கிரம் அடைந்து நன்மைகளைத் தருவார் என்பதால் தான். சுக்கிரன் ஜன.27, இடம்மாறினாலும், மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குரு ஜன.16ல், 4ம் இடமான துலாம் ராசிக்கு மாறுகிறார். இதனால் மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். சுக்கிரனால் குடும்பத்தில் வசதிகள் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். புதனால் எடுத்த காரியம் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். அதன்பின் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். மனைவி, மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் உருவாகலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொண்டு இருக்கும். ஜன.14 பிப்.9,10ல் சகோதரிகள் மூலம் உதவி கிடைக்கும். பிப்.1,2ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் இந்த மாதம் முற்பகுதியில் சிறப்பான பலன்களை காணலாம். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பெண்களை பங்குதாரராகக் கொண்ட தொழில் விருத்தி அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். போட்டியாளர்களால் அவ்வப்போது இடையூறு வரலாம். ஜன.25, 26ல் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார வளம் கூடும். ஜன.15,16, பிப்.7,8ல் பண விரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். ராகுவால் பொருட்களை களவு கொடுக்க நேரிடும். இந்த நாட்களில் உங்கள் நேரடிப்பார்வையில் வியாபார நிறுவனம் இருப்பது பிரச்னைகளை வெகுவாகக் குறைத்து விடும்.
பணியாளர்கள் ஜன.30 வரை சிறப்பான பலனைப் பெறுவர். பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரியலாம். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பிப்.3,4ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். எதிலும் வெற்றி கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஜன.27க்கு பிறகு பெண்களால் பலன் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் பெற்று புகழ், பாராட்டு கிடைக்க பெறுவர்.
அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. ஜன.16க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். ஜன.30க்கு பிறகு சிலருக்கு குழப்பம் நிலவும். கவனம் தேவை. அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகளுக்கு பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் இருக்காது. வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் கை நிறைய சலுகை எதிர்பார்க்கலாம். பிப்.1 முதல் வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். ஜன.27,28,29 ஆகிய நாட்கள் சிறப்பானதாக இருக்கும். ஜன.17,18, 19ல் நீங்கள் துவங்கும் திட்டங்கள் வெற்றி பெறும்.
நல்ல நாள்: ஜன.14,17,18,19,25,26,27,28, 29, பிப்.3,4,5,6,9,10
கவன நாள்: ஜன 30,31சந்திராஷ்டமம். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: நவக்கிரகங்களைச் சுற்றி வரவும். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். செவ்வாயன்று முருகனை வழிபட்டு வாருங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள்.