துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) சொத்து யோகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2017 03:01
நியாயமாக சம்பாதிக்க விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!
செவ்வாய் ஜன.16ல் கும்ப ராசியில் இருந்து மீனத்துக்கு மாறி நன்மை செய்வார். இந்த மாதம் புதன் ஜன.30க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். சுக்கிரன் ஜன.27 வரை சிறப்பான பலன் தருவார். ராகுவாலும் நன்மை மாதம் முழுவதும் கிடைக்கும். இதனால் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். செவ்வாயால் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அபார ஆற்றல் பிறக்கும். புதிதாக வீடு, மனை வாகனம் என சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். குரு பகவான் ஜன.16ல் உங்கள் ராசிக்கு வருவதால் நன்மை குறையும். சுக்கிரனால் மாத முற்பகுதியில் பெரியோர் ஆதரவு கிடைக்கும்.
பிள்ளைகளின் வழியில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஜன.30க்கு பிறகு கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஜன.20,21ல் பெண்களால் நன்மை உண்டாகும். திடீர் வருமானம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜன.15,16, பிப். 11,12ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். ஜன. 27,28,29 ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். செவ்வாயால் ஜன.16க்கு பிறகு உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவ செலவு குறையும். ஜன.30,31,பிப். 7,8ல் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
தொழில், வியாபாரத்தில் செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். சூரியனால் ஏற்பட்ட மறைமுகப்போட்டி, அரசு வகையில் பிரச்னை போன்றவை ஜன.30க்கு பிறகு மறையும். பிப்.1,2ல் திடீர் வருமானம் வர வாய்ப்புண்டு. ஜன.17,18,19,22,23,24ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிட்டு விலகும்.
பணியாளர்கள் சுக்கிரன் பலத்தால் நல்ல வளர்ச்சி காண்பர். சக ஊழியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அரசு ஊழியர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும் திறம்பட சமாளிப்பர். மாதத் தொடக்கத்தில் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொறுமையுடன் இருப்பது அவசியம். ஜன.30க்கு பிறகு புதனால் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட கால கோரிக்கையும் தற்போது நிறைவேறும். அரசு ஊழியர்கள் ஜன.14, பிப்.9,10ல் நற்பலன் கிடைக்கப் பெறுவர். ஜன.16க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.
கலைஞர்கள் சிறப்பான பலனைப் பெறுவர். அரசு வகையில் புகழ், பாராட்டு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். ஜன.27க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படலாம்.
அரசியல்வாதிகளுக்கு ஜன.16க்கு பிறகு எதிர்பார்ப்பு நிறைவேறும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் ஆதரவு நல்லமுறையில் அமைந்திருக்கும்.
மாணவர்கள் மாத முற்பகுதியில் புதன் சாதகமற்று இருப்பதால் பிரச்னைக்கு ஆளாகலாம். சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றி நடக்கவும். ஜன.30க்கு பிறகு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி கிடைக்கப் பெறுவர்.
விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. விளைச்சல் அதிகரிக்கும். விளைபொருளை அதிக விலைக்கு விற்க வாய்ப்புண்டு. புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஜன.16க்கு பிறகு கைகூடும். நிலம் சம்பந்தமான பிரச்னை மறையும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் வாழ்வில் குதுாகலம் காண்பர். மனதில் சந்தோஷம் நிலைத்திருக்கும். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பெண் காவலர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பிருக்கிறது. ஜன.25,26ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வர். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். ஜன.27,28 சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகளால் உதவி கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: ஜன. 14,15,16,20,21,25,26, பிப்.1,2,3,4,9,10,11,12
கவன நாள்: பிப். 5,6 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் முக்கிய முடிவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: நீலம், சிவப்பு
பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள். நரசிம்மர் வழிபாட்டில் தவறாமல் ஈடுபடுங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.
மேலும்
பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »