பதிவு செய்த நாள்
16
ஜன
2017
05:01
ராமேஸ்வரம்: சபரிமலை தரிசனம் முடிந்த பிறகு, ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீராடி தரிசனம் செய்தனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா சேர்ந்த லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் ஜன.,14ல் சபரிமலையில் ஜோதி தரிசனம் செய்தனர். இதன் பிறகு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பஸ், வேன், காரில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பின், கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். இதனைதொடர்ந்து சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட், கோயில் ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.