Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணும் பொங்கல் கொண்டாட்டம்: ... திருமுக்கூடலில் பார் வேட்டை திருவிழா கோலாகலம் திருமுக்கூடலில் பார் வேட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணும் பொங்கலையொட்டி திருத்தணி முருக பெருமான் வீதியுலா
எழுத்தின் அளவு:
காணும் பொங்கலையொட்டி திருத்தணி முருக பெருமான் வீதியுலா

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
11:01

திருத்தணி: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, உற்சவர் முருகப் பெருமான், திருத்தணி நகர வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் திருவிழாவையொட்டி, மூன்று நாட்கள் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து இறங்கி வீதிகள் தோறும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி, பொங்கல் நாளில் (முதல் நாள்) மலைக்கோவில் பின்புறம் உள்ள அர்ச்சகர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில் உற்சவர் முருகப்பெருமான் வலம் வந்து அருள்பாலித்தார். நேற்று முன்தினம் (இரண்டாம் நாள்) மேல் திருத்தணி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று (மூன்றாம் நாள்) காலை 6:00 மணிக்கு, படிகள் வழியாக, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சன்னிதி தெருவில் உள்ள கோவில் ஆணையர் குடியிருப்பு முன், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளினார். பின், அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு திருத்தணி பெரிய தெரு சுமைதாரர்கள் மாட்டு வண்டியில் உற்சவ பெருமானை, நகரம் முழுவதும் உள்ள வீதிகளுக்கு அழைத்து (இழுத்து) சென்றனர். மாலை, 5:30 மணிக்கு பழைய பஜார் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் என்கிற சண்முகதீர்த்தக்குளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 8:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றார். உற்சவர் முருகர் வீதியுலா வருவதை முன்னிட்டு நகர் முழுவதும் பெண்கள் தெருக்களில் வண்ண, வண்ண கோலங்கள் போட்டும், தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
கடையநல்லுார்; கடையநல்லுார் பூமிநீளா சமேத நீலமணிநாதர் (கரியமாணிக்கப்பெருமாள்) கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar