வல்லக்கோட்டை: காணும் பொங்கலை முன்னிட்டு, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று காலை முதல், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சென்று சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவர் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.