விருத்தாசலம்: விருத்தாசலம் மஹாவீர் பசு மடத்தில் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. விருத்தாசலம் பெண்ணாடம் சாலையிலுள்ள மஹாவீர் பசுமடத்தில் நடந்த விழாவிற்கு கலைச்செல்வன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மடத்தின் தலைவர் அசோக்குமார் வரவேற்றார். மடத்தின் நிறுவனர் அகர்சந்த் விழாவை துவக்கி வைத்து, பசுமாடுகளுக்கு உணவு வழங்கினார். முன்னதாக, புதிய குடிலை சுரேஷ் திறந்து வைத்தார். விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.