திருப்புத்துார்: திருப்புத்துார் ராஜகாளியம்மன் கோயிலில் ஊர் செழிக்க வேண்டி 108 கோமாதா பூஜை நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கின. மாலையில் பசுக்களின் பெருமை குறித்து பிள்ளையார்பட்டி கணேசன் பேசினார். மாலை 3:30 மணிக்கு கோமாதா பூஜை நடந்தது. பங்கேற்ற 108 பசுக்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. பிள்ளையார்பட்டி கோயில் தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், துளாவூர் ஆதீனம், பாதரக்குடி மடாதிபதி ரவீந்திர சுவாமிகள், காமாட்சிபுர ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், சொக்கநாதபுரம் சாக்த ஸ்ரீ அய்யப்ப சுவாமிகள், ஆ.பி.சீ.அ.கல்லுாரி செயலர் ராமேஸ்வரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.