Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் எப்போது மகிழ்ந்தான்? மூன்று நாள் தர்ப்பணம்! மூன்று நாள் தர்ப்பணம்!
முதல் பக்கம் » துளிகள்
செல்வவளம் தரும் கஜலட்சுமி வழிபாடு!
எழுத்தின் அளவு:
செல்வவளம் தரும் கஜலட்சுமி வழிபாடு!

பதிவு செய்த நாள்

20 ஜன
2017
05:01

திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவள் கடலிலிருந்து வெளிப்பட்டதும் திசை யானைகள் எட்டும், எண் திசையிலிருந்தும் பொற்குடங்களில் தூய நீரை ஏந்தி வந்து நீராட்டின என்கிறது விஷ்ணு புராணம். இங்ஙனம், யானைகள் நீராட்ட நடுவில் வீற்றிருப்பதால், இவளை கஜலட்சுமி என்று அழைக்கின்றனர். இவளை விளக்கில் நிலைப்படுத்தி வணங்குவது, நெடுங்கால வழக்கம். விளக்கில் திருவாசிக்கு (பிரபைக்கு) நடுவே கஜலட்சுமி வடிவத்தை அமைக்கின்றனர். இவளைச் சாந்த லட்சுமி, தயா லட்சுமி, சுதந்திர லட்சுமி என்று பலவாறு போற்றுகின்றனர். சங்க இலக்கியங்களில் கஜலட்சுமியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பழங்காசுகளில் அவள் கஜலட்சுமியாகப் பொறிக்கப்பட்டுள்ளாள். வடநாட்டில் கண்டெடுக்கப்பட்ட சில முத்திரைகளில், மேற்கரங்களில் சங்கு, பறவை ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தருகிறாள் கஜலட்சுமி. யானைகள் சங்கின் மீதும் பறவையின் மீதும் நீரைப் பொழிகின்றன. தென்னிந்தியாவில் உள்ள பல கோயில்களில் லட்சுமியின் மேற்கரங்களில் உள்ள தாமரை மலர்களில் கிளிகள் வீற்றிருப்பதைக் காண்கிறோம்.

எண்திசை யானைகளும் இவளை நீராட்டுவதாக புராணங்கள் சொன்னாலும் நடைமுறையில் இரண்டு யானைகள் நீராட்டுவது போல் அமைத்துள்ளனர். மேற்கரங்களில் தாமரை மலர்களையும் கீழ்க் கரங்களில் அபயவரத முத்திரைகளையும் தாங்கி அருள்பாலிக்கிறாள் கஜலட்சுமி. சூக்தம் அவள் யானைகளின் பிளிறலால் மகிழ்வதாகக் கூறுகிறது. யானைகள் செல்வத்தின் அடையாளமாகும். யானையை லட்சுமியாகப் போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜ பூஜையால் மகிழும் மகாலட்சுமி, அந்த இடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்று நம்புகினறனர். கஜலட்சுமி திருவடிவை வீட்டின் நிலைப்படிகளிலும் அமைப்பார்கள். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு, அவர்கள் விரும்பியதை விரும்பியவாறு நிறைவாக அளித்து, அந்த இல்லத்தில் சகல சௌபாக்கியங்களும் செல்வவளத்தையும் பெருகச்செய்வாள் திருமகள். தீபங்கள், யானைகள், பூரண கும்பம் ஆகியன லட்சுமிகடாட்சம் நிறைந்தவை. இந்த மூன்றும் இருக்கும் இடத்தில் செல்வவளத்துக்குக் குறைவிருக்காது.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar