எள், விளக்கு, எலுமிச்சை விளக்கை வீட்டில் ஏற்றக்கூடாது என்கிறார்களே! சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2017 05:01
வீட்டில் நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றுவது தான் சரியானது. அதைத்தான் சாஸ்திரம் வித்திருக்கிறது. வீட்டில் சாதாரண நாட்களில் நெய் விளக்கு கூட ஏற்றக் கூடாது. நெய் விளக்கு என்பது பூஜை முடிந்த பிறகு, ஹாரத்தில் காட்டுவது போல், ஆஜ்ய தீபம் தர்சயாமி என, பயன்படுத்துவது. எனவே, வீட்டில் சாதாரண நாட்களில் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதே சிறந்தது. எள் முடிப்பு போட்ட விளக்கு, எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றுவது என்பதெல்லாம் தவறு. எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றுவது என்பது, பலி கொடுப்பதைப் போன்றது. எனவே, வீட்டில் ஏற்றுவது தவறு.