குளித்து முடித்ததும் ஈரம் காய தலையில் துண்டு கட்டிக் கொண்டு பெண்கள் பூஜை செய்யலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2017 05:01
கூடாது. தலையில் துண்டோடு பூஜையோ, ஜபமோ, பாராயணமோ, கோயிலுக்குச் செல்வதோ கூடாது. தலையை நன்றாகக் காய வைத்துக் கொண்டு தான் செய்ய வேண்டும். அதேபோல், தலை முடியை விரித்துப் போட்டுக் கொண்டும் மேற்சொன்னவற்றைச் செய்யக்கூடாது. கூந்தலின் நுனியை முடித்துக் கொண்டுதான் எதையும் செய்ய வேண்டும். தேவகாரியங்கள் எதையும் கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு செய்யக் கூடாது என்பது விதி. பிதுர் காரியங்களின்போதுதான் தலையை அவிழ்த்துப் போட்டுக்கொண்டு ஈரம் சொட்டச் சொட்டச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரத்தில் உள்ளது. தேவ காரியங்களின்போது அவ்வாறு செய்தால், தேவதைகள் அந்த பூஜையையோ, உபசாரத்தையோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.