பதிவு செய்த நாள்
21
ஜன
2017
11:01
ஆத்தூர்: கைலாசநாதர் கோவிலில், பிரித்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், வசிஷ்ட நதி தென்கரையில் உள்ள கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பிரித்தியங்கிராதேவி அம்மன், சொர்ண பைரவர் சுவாமி சிலைகள் உள்ளன. நேற்று, தேய்பிறை அஷ்டமியொட்டி, பிரித்தியங்கிராதேவி கோவிலில், உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. பின், பிரித்தியங்கிரா தேவி அம்மன், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆத்தூர், சேலம், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமானோர் வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், தேய்பிறை அஷ்டமியொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.